விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை இளைஞரின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற "பசுமை கணபதி"

இயற்கைக்கு எவ்விதத்திலும் தீங்கு ஏற்படுத்தாத வகையில் பசுமையான முறையில் விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடுவதற்காக 25 வயதான கோவை இளைஞர் "பசுமை கணபதி" சிலைகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.

வடவள்ளியைச் சேர்ந்த எலக்டாரிக் பொறியாளர் ஸ்வரஜித் அலகந்தாவே இந்த புதிய முயற்சியில் இயற்கையை காக்கும் நம் கோவை இளைஞர். பெரும்பாலான பகுதிகளில் விற்பனைக்காக அடுக்கப்பட்டுள்ள இரசாயன பூச்சு பூசப்பட்ட, பிளாஸ்டிக் கலவையிலான விநாயகர் சிலைகளை பார்த்தே இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு நட்புமிக்க பசுமை கணபதியை தயாரிக்க தூண்டியது என்கிறார் அந்த இளைஞர்.

மேலும் அவர் கூறுகையில், நகரம் முழுவதும் பிளாஸ்டிக் கலவையினால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்கப்பட்டு வரும் சூழலில் களிமண் உள்ளிட்ட இயற்கைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்ட எனது பசுமை கணபதி சிலைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. "எங்களது இந்த கணபதி சிலைகள் ஒன்று 40 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரை என அளவிற்கு தகுந்த வகையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை, வழிபாட்டிற்குப் பின் பொது இடங்களில் புதைத்தாலோ அல்லது நீர் நிலைகளில் கரைத்தாலோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.



"விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. நீரில் உள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தொடர்ந்து அரசுத் தரப்பிலும், தன்னார்வலர்கள் தரப்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாரிஸ் பிளாஸ்டர் மற்றும் ரசாயன வண்ணப்பூச்சுகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் பெரிய அளவிலான சேதங்களை இயற்கைக்கு ஏற்படுத்தி வருகிறது. களிமண் பயன்படுத்தி நமது பண்டைய முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பசுமை கணபதி மக்கும் தன்மை கொண்டது. அதனால் நகரம் முழுவதும் களிமண் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்துவது பாதுகாப்பானது" என்கிறார் ஸ்வர்ஜித்.

இயற்கையை மாசுமடுத்துவதை யாரும் விரும்புவது இல்லை. இருப்பினும் ஒரு சில செயல்களால் நம்மை அறியாமல் பல்வேறு முறைகளில் இயற்கையை சீரழித்து வருகிறோம். அதனை உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வருட விநாயகர் சதுர்த்தியை எவ்வித தீங்கும் இன்றி நல்ல முறையில் சுற்றுச்சூழல் நட்புடன் கொண்டாடுவோம்.

ஸ்வரஜித் அலகந்தின் "பசுமை கணபதி"யினை வாங்கி பயனடைய விரும்புவோர் 9655667775 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பசுமை கணபதியை வாங்கி மகிழலாம்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...